Home LATEST NEWS வெடிகுண்டே வெடிச்ச மாதிரி இருந்தது: விருதுநகரில் அதிர்ச்சி!

வெடிகுண்டே வெடிச்ச மாதிரி இருந்தது: விருதுநகரில் அதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம் கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெளிமாநிலத்தில் இருந்து பாறை உடைக்கும் பணிக்காக ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டது. அதனை அந்த குவாரியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனி அறையில் இறக்கி வைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது வெடிபொருட்கள் பாதுகாப்பு அறை முற்றிலும் தரைமட்டாகி கிடந்தது. மேலும் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் 4 பேரின் உடல்கள் சின்னாபின்னமாகி சிதறிக்கிடந்தன. இப்போது மீட்பு பணி நடக்கிறது.

Exit mobile version