இளைஞரை உருட்டுக் கட்டையால் தாக்கிய காவலர்!

24

சென்னை ஆவடியில் காவலர் ஒருவர் இளைஞரை மூங்கில் உருட்டுக் கட்டையால் தலை, கால் பகுதிகளில் காட்டு மிராண்டித்தனமாக அடித்துள்ளார். காவலர் அடிப்பதை அங்கிருந்த பெண் தடுக்க முயற்சிப்பதும், காவலரை அடிக்க அந்த இளைஞர் சாலையில் இருந்த கற்களை எடுக்க முயற்சிப்பதும் வீடியோவில் இருக்கிறது.

ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு ரோட்டில் செல்லும் மக்களை அங்கு போதையில் இருந்த லோகேஷ் கற்களைக் கொண்டு அடித்துள்ளார். அதனை விசாரிக்க சென்ற காவலர் சரவணன் என்பவரையும் கற்களைக் கொண்டு அடிக்க முயற்சித்துள்ளார்.

இதையடுத்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவலர்கள். பின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்