கடன்தாரர் மனைவியை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்!

20

கணவர் 770 ரூபாய் கடன் தவணை செலுத்தாததால், தனியார் வங்கி ஊழியர்களால் மனைவி சிறைபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சேலம் வாழப்பாடியை சேர்ந்த பிரசாந்த் 4 மாதங்களுக்கு முன் ஐடிஎஃப்சி வங்கி மூலம் 35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வாரம் 770 வீதம் 52 வாரங்களுக்கு தவணை செலுத்த வேண்டும்.

இரண்டு வாரங்களாக பிரசாந்தால் தவணை தொகையை செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. பிரசாந்த் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்த பிரசாந்தின் மனைவி கவுரி சங்கரியிடம் கடன் குறித்து கேட்டுள்ளனர். கணவர் பணிக்கு சென்றிருப்பதாகவும் அவர் வந்த உடன் வங்கி ஊழியரை தொடர்பு கொள்ள சொல்வதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத வங்கி ஊழியர்கள் கவுரி சங்கரியை வங்கிக்கு வருமாறும், தவணை தொகையை செலுத்திவிட்டு, உங்கள் கணவர் அழைத்துச்செல்லட்டும் என கூறி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் பிறரிடம் கடன்பெற்று தவணை தொகையை வங்கியில் செலுத்தி மனைவியை மீட்டுள்ளார்.