ஓட்டு போட்டால் பீர், தோசை மற்றும் டாக்ஸி சவாரி இலவசம்!

25

பெங்களூருவில் ஏப்ரல் 26ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன. சலுகைகளைப் பெற வாக்களித்தவர்கள் தங்கள் விரல் மையை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.

ஏராளமான ஹோட்டல்கள், பப்கள் மற்றும் டாக்ஸி நிறுவனங்கள் தள்ளுபடிகள், இலவசங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன. நிசர்கா கிராண்ட் ஹோட்டல், வாக்களிக்கும் நாளில் வாக்காளர்களுக்கு இலவச வெண்ணெய் தோசை, நெய் சாதம் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை வழங்குகிறது.

தேர்தல் தினத்தில் வாக்களித்துவிட்டு கையில் மையினைக் காட்டும் அனைவருக்கும் 15 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என பெங்களூரில் உள்ள வொண்டர்லா அறிவித்துள்ளது. பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ மற்றும் கேப் சவாரிகளை வழங்கவுள்ளதாக ரேபிடோ அறிவித்துள்ளது