பாஜகவுக்கு ஓட்டுபோடாவிட்டால் புல்டோசர் பாயும் – மிரட்டல்!

21

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளது புட்குசி என்ற கிராமம். இங்கு இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்து மக்களை பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள் என சிலர் மிரட்டி உள்ளனர்.

இல்லையென்றால், புல்டோசர் உதவியுடன் உங்கள் வீடுகள் காலி செய்யப்படும் என 9 வனத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிராம மக்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாஜகவினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது என கூறியுள்ளனர்.