பட்டாசு லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வேதிப்பொருள் விற்றால் நடவடிக்கை!

27

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்க உரிமம் பெறாதவர்களுக்கு இரசாயன மூலப் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற வர்களுக்கு மட்டுமே இரசாயன மூலப் பொருள் விற்பனை செய்ய வேண்டும். பிறருக்கு விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆலைகளை குத்தகை மற்றும் உள் குத்தகைக்கு எடுத்து பட்டாசு தயாரிப்போருக்கும் வேதிப் பொருட்களை விற்கக் கூடாது. பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலா ளர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.