வாக்களிக்க ஜோதிகா ஏன் வரல? சூர்யாவுக்கு சிக்கல்! – Jyothika

22

Jyothika: ஏப்ரல் 19 தமிழகத்தில் தேர்தல் நடந்த போது நடிகர் சூர்யா, அவருடைய சகோதரர் கார்த்தி வாக்களிக்க வந்தனர். அப்போது ஜோதிகா வரவில்லை. ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டேன். மற்றவர்களும் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என சூர்யா பேட்டி கொடுத்தார்.

“ஜோதிகா மேடம் வாக்களிக்க வரவில்லையா” என திரும்ப அவரிடமே கேட்கப்பட்டது. கேள்விக்கு எந்த பதிலையும் அளிக்காமல் அவர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார் சூர்யா. இதனால் ஜோதிகா ஏதாவது படப்பிடிப்பில் இருந்திருப்பார். அதனால் அவர் வர முடியாத சூழல் உண்டாகியிருக்கும் என கூறப்பட்டது.

ஆனால் ஜோதிகா நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ளை வீடியோவாக போட்டுள்ளார். இதனால்தான் அவர் வாக்களிக்க வரவில்லை என தெரிகிறது. ஜனநாயக கடமையாற்றுங்கள் என ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு சூர்யா வீட்டிலேயே இப்படி ஒருவர் ஓட்டு போடாமல் இருப்பது சரியா என ரசிகர்கள் கேட்கின்றனர்.