மேயர் காருக்கு வழி விட மாட்டியா? அரசு பஸ் டிரைவரின் அட்டகாசம்!

16

கேரளாவில் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. டிரைவர் தீபு என்பவர் ஓட்டினார். இரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் பட்டம் அருகே சென்ற போது மேயர் ஆர்யா ராஜேந்திரனின் கார் பஸ்சுக்கு பின்னால் வந்தது.

மேயர் காருக்கு வழிவிடாமல் டிரைவர் பஸ்சை ஓட்டியதாக தெரிகிறது. அங்குமிங்கும் வளைந்து சென்றுள்ளார். உடனே வேகமாக முன்னேறி சென்ற மேயரின் கார் அந்த பஸ்சை முந்தி சென்று வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய மேயர் ஆர்யாவும், அவரது சகோதரனும் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மேயர் கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் தீபுவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தன்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது டிரைவர் தீபு புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லை.