வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

23

தேர்தலில் 2, 3ம் இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள், முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் EVM எந்திரங்களை சரிபார்க்க விண்ணப்பிக்கலாம் என VVPAT இயந்திரத்தில் 100% ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ணக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழுத்துப்பூர்வமான விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, EVM எந்திரங்களை பொறியாளர் குழு சோதிக்க வேண்டும் சோதனையின் போது வேட்பாளர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.

சோதனையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, எந்திரத்தின் நிலையை தெரிவிக்க வேண்டும் இதற்கான செலவை வேட்பாளர் ஏற்க வேண்டும். ஏதாவது கோளாறு இருந்தால் அந்த தொகையை தேர்தல் அதிகாரிகள் திரும்ப அளிக்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.