நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: பெண் கொலை!

22

பெங்களூருவில், வீட்டில் தனியாக வசித்த 56 வயது பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனியாக வசித்து வந்த ஷோபா என்ற 56 வயது பெண் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் அடிக்கடி தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். நவீன் என்ற 24 வயது வாலிபருக்கும், ஷோபாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நேரில் சந்தித்து தங்களது நட்பை வளர்த்தனர். ஒரு கட்டத்தில் இது அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. அதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ஷோபா, நவீனை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்பேரில் நவீனும், ஷோபாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கும்படி ஷோபா வற்புறுத்தி உள்ளார். அவரது இந்த மோசமான செயலை தாங்க முடியாத நவீன், ஷோபாவை கண்டித்துள்ளார். ஆனால் அவர் அதை கேட்காததால், ஷோபாவை நவீன் சரமாரியாக தாக்கி இருக்கிறார். பின்னர் அவரது அடிவயிற்றில் சரமாரியாக தாக்கியும், கழுத்தை நெரித்தும் ஷோபாவை நவீன் கொலை செய்துள்ளார். அதையடுத்து நிர்வாண நிலையில் கிடந்த ஷோபாவின் உடலை அப்படியே போட்டுவிட்டு நவீன் அங்கிருந்து தப்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.