வெளிய வரச் சொல்லு அவன! அரிவாளோடு இறங்கி ரகளை செய்த துணை வட்டாட்சியர்!

25

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்பாக தெருவில் சென்ற நாய்களை கொளஞ்சியப்பனின் நாய் விரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது, அதே தெருவில் கொளஞ்சியப்பன் வீட்டருகே வசித்து வரும் கள்ளக்குறிச்சி மண்டல துணை வாட்டாட்சியர் சிலம்பரசன், நாய் குரைத்த சத்தம் கேட்டு ஆத்திரமடைந்துள்ளார். தொடர்ந்து, தனது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்துக்கொண்டு ஆவேசமாகவும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியவாறும் கொளஞ்சியப்பன் வீட்டின் வாசலுக்கு சென்றுள்ளார்.

கொளஞ்சியப்பனிடம் உன்னை வெட்டி கொலை செய்யாமல் விட மாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரச்னை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.