பின்புறமாக வந்து மனைவியை தாக்கிவிட்டு தப்பியோடிய கணவன்!

24

திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். ரேவதி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கணவன் – மனைவி கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ரேவதி வேலைக்கு நடந்து சென்றபோது பின்புறமாக வந்த சதீஷ் ரேவதியைக் காலால் எட்டி உதைத்து, கையில் மறைத்து வைத்திருந்த இரும்பு சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரேவதி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு, மாமண்டூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.