சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்!

22

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன். இவரது அண்ணன் மகனான செந்தில். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 19ம் தேதி இரு குடும்பத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

காவேரிப்பட்டிணத்தில் உள்ள தனது மாட்டுத்தீவன கடையில் அமர்ந்திருந்த சின்னவனை பார்த்த செந்தில், தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.