தமிழ்நாட்டிலேயே கை இல்லாதவராக லைசன்ஸ் பெற்ற முதல் நபர்!

18

சென்னை வியாசர் பாடியை சேர்ந்தவர் தான்சென், வயது 30. இவருக்கு 10 வயது இருக்கும்போதே, உயர் அழுத்த மின்சார கம்பி கம்பியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கை முட்டிக்கு கீழே தன் இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

ஓட்டுநர் உரிமம் பெற நினைத்து அதற்காக விண்ணப்பித்துள்ளார்.இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சோதனையின் போது கார் ஓட்டுவதில் இவருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தான்சென் வாகனம் ஓட்டுவதற்கு தகுதியானவர் என்று மருத்துவர்கள் சான்றழித்துள்ளனர். ஏப்ரல் 22 அன்று, ஓட்டுனர் உரிமம் பெற்ற தான்சென் தமிழகத்திலேயே முதல்முறையாகவும் இந்தியாவிலேயே மூன்றாவது நபராகவும் கைகள் இல்லாத கார் ஓட்டுனர் லைசன்ஸ் பெற்றவர் என்ற சாதனையை படைத்து அசத்துள்ளார்.