திடீர் ஹீரோவாக மாறிய ஆட்டோ ஓட்டுநர்!

23

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பாலத்தில் ஒரு பெண் நடந்து சென்றார். அவர் கையில் மருந்து சீட்டுகள் அடங்கிய பை இருந்தது. திடீரென பாலத்தின் மீது பையை வைத்துவிட்டு யோசித்தவர் ஆற்றில் குதித்தார். அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார்.

ஆட்டோவில் மூட்டைகளை கட்டுவதற்காக வைத்திருந்த கயிற்றை எடுத்து ஆற்றில் வீசினார். நீரில் தத்தளித்து கொண்டிருந்த அந்தப் பெண் அதை பிடித்துக்கொண்டார். கயிற்றைப் பிடித்து உயிருக்கு போராடிய பெண்ணை பரிசல் ஒட்டிகள் உதவியோடு அப்பகுதி மக்கள் காப்பாற்றினர்.

அங்கு இருந்தவர்கள் அந்த பெண்ணை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் அந்தப் பெண் யார், எதற்காக ஆற்றில் குதித்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.