கல்யாணம் ஆகாமல் கர்ப்பம்: தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ்!

24

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வர்ஷா சென்னை தியாகராய நகரில் தங்கி நர்ஸ்சாக பணியாற்றி வருகிறார். சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் நபரை காதலித்தார். திருமணம் செய்யமாலேயே நெருக்கமாக பழகி வந்ததாககூறப்படும் நிலையில் வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வர்ஷாவிற்கு நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

வர்ஷா தனக்குத்தானே பிரசவம் பார்த்து, குழந்தையின் இரு கால்களையும் வர்ஷாவே வெட்டி எடுத்துள்ளதாகவ; இதனால், குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

இறந்த குழந்தையின் சடலத்தை பத்திரப்படுத்திய மருத்துவர்கள், வர்ஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வர்ஷாவிற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வர்ஷாவிடம் தியாகராய நகர் காவல்நிலையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.