கோடை வெயிலை சமாளிக்க முதியவரின் புது டெக்னிக்!

25

கல்லிடைகுறிச்சி அருகே முதியவர் ஒருவர், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள தனது காரின் மீது தென்னந்தட்டியை வைத்து பயணம் செய்து வருகிறார்.

நெல்லை மாவட்டம் ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த பிரம்ம நாயகம் என்பவர் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தனது காரின் மீது தென்னந்தட்டிகளை வைத்து உலாவருவது வழக்கம். அதேபோல் இந்த கோடை காலத்திலும் தனது காரின் மீது தென்னந்தட்டிகளை வைத்து பயணித்து வருகிறார்.

இது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், கோடை காலத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள இந்த புதுவித யோசனை உதவுவதாக முதியவர் தெரிவித்தார்.