பல்பைத் திருடி பேன்ட் பாக்கெட்டில் போட்ட போலீஸ்!

26

உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் சிக்கந்தபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு போலீஸ்காரர் கடையின் வெளியே எரிந்து கொண்டிருந்த பல்ப் ஒன்றை வேகமாக ஏறி திருடி தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்கிறார்.

திருடிய பிறகு எதுவும் நடக்காதது போல செல்போனில் பேசிக் கொண்டு போகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

பொதுமக்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டிய போலீஸ்காரரே திருடுவது, வேலியே பயிரை மேய்வது போல உள்ளது என்று மக்கள் கூறியுள்ளனர்.