தேவகவுடா பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம்!

23

தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்தார். கர்நாடகத்தில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம். பி. பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.

தேர்தல் முடிந்ததும் அவர் ஜெர்மனி சென்று விட்டார். அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவரை தேடப்ப டும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக் கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொ தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நிரு பர்களிடம் கூறியதாவது:- பிரஜ்வல் ரேவண்ணாவை மத்திய அரசு பாதுகாக்கிறது. அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம்.

அவர் இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய் யுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவர் மீது கற்ப ழிப்பு, பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன. இந்த விவ காரம் தெரிந்தும் ஜனதா தளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட் டணி வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீஸ் அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு சித்தராமையா கூறினார்.