லண்டனில் பாஜக கொடியை பறக்கவிட்ட இந்திய வம்சாவளியினர்!

14

பிரதமர் மோடிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் பெரும்பாலானோர் மோடிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.

ரன் பார் மோடி என்ற பெயரில் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். அவர்கள் இந்திய தேசிய கொடி மற்றும் பாஜக கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு வீதிகளில் உலா வந்தனர்.

லண்டனில் புகழ்பெற்ற டவர் பிரிட்ஜ் அருகே பேரணி முடிவுக்கு வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.