தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்!

20

தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழுப்பு வதற்க்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின்போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கர்நாடகா, மகாராஷ்டிரா பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது.

அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக கட லோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இத னால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக் குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.