திடீரென எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற இளைஞர்!

19

மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரண். பொறியியல் மாணவர். கொல்கத்தாவிலிருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். முன்னதாக இவருக்கு விமானத்தில் ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அது வசதியாக இல்லாததால் கரண் தனது இருக்கையை மாற்றி தரும்படி கோரியுள்ளார்.

கரணின் கோரிக்கையை ஏற்ற விமான ஊழியர்களும் அவருக்கு வேறு ஒரு இருக்கையை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இந்த இருக்கையானது எமர்ஜென்ஸி கதவிற்கு அருகில் இருந்துள்ளது. பெங்களூர் விமான நிலையத்தை அடைந்த விமானமானது தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கரண் தனக்கு அருகில் இருந்த அவசர கதவினை திறக்க முயன்றுள்ளார்.

இருப்பினும் கரணின் இச்செய்கையால் அதிர்சியடைந்த இண்டிகோ பாதுகாப்பு அதிகாரிகள், பெங்களூரு சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் கரணை ஒப்படைத்தனர். கரணின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாத சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.