ஆபாச படம் காட்டி 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!

18

சிம்லாவை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சிறப்பு வகுப்புகள் முடித்துவிட்டு அழுது கொண்டே வீடு திரும்பி உள்ளார். இதுகுறித்து மாணவியின் அம்மா விசாரித்துள்ளார்.

பள்ளியின் ஓவிய ஆசிரியர் செல்போனில் ஆபாச படத்தை காட்டி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் உடனடியாக இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் ஆசிரியர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.