திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்!

24

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த். இவருக்கு 26 வயதாகிறது. திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் ஊர்வலம் துமாரி கிராமத்தில் நடந்தது. அப்போது மணமகள் போல ஆடை அணிந்து ஒரு இளம்பெண் வந்தார்.

திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து மணமகன் ராகேஷ் பந்த் மீது வீசினார். இதில ராகேஷ் பிந்த் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆசிட் வீசிய பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரிய வந்தது.

ராகேஷ் பிந்தை தான் விரும்பியதாகவும், அவர் வேறு திருமணம் செய்வதை ஏற்க முடியாததால் ஆசிட் வீசியதாகவும் லட்சுமி கூறினார். இதையடுத்து அவரை அடித்து, ராகேஷ் பிந்த் குடும்பத்தினர் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.