திருவிழாவில் தாய், தங்கை கண்முன்னே இளைஞர் கொலை!

22

புதுச்சேரி உருளையன்பேட்டையில் கங்கை முத்து மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த உத்ரேஷ் என்பவர் தாய் மற்றும் தங்கையுடன் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்துள்ளார்.

அப்போது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தாங்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு, உத்ரேஷை சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உத்ரேஷ் இறந்தார்.

கொலை செய்யப்பட்ட உத்ரேஷ் மீது கஞ்சா, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.